Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மகளை கொன்று தாய் தற்கொலை

மகளை கொன்று தாய் தற்கொலை

மகளை கொன்று தாய் தற்கொலை

மகளை கொன்று தாய் தற்கொலை

ADDED : பிப் 01, 2024 12:21 AM


Google News
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, பட்டாளம் ஜெய் நகர் 1வது தெருவில் வசித்தவர் காயத்ரி, 35. முதல் கணவரை விவாகரத்து செய்தவர், 10 ஆண்டுக்கு முன், முகமது அப்ரான் என்பவரை திருமணம் செய்தார். துணி வியாபாரம் செய்து வந்த இவர், இரண்டு ஆண்டுகளாக மகள் மைத்ரா, 14, மற்றும் முகமது அப்ரானுடன் புளியந்தோப்பில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், முகமது அப்ரானுக்கு கடந்த 2020ல் வந்தவாசியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணமாகி, வில்லிவாக்கத்தில் தனியே வீடு பார்த்து குடியமர்த்தி இருப்பதும் காயத்ரிக்கு தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனிடையே துணி வியாபாரத்தில் நஷ்டம், மகளும் மனநல பாதிப்பு என, மன விரக்தியில் இருந்த காயத்ரி, நேற்று இரவு 8:00 மணியளவில், மகள் மைத்ராவுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து, தானும் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us