Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'பெற்றோர் தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்க கூடாது'

 'பெற்றோர் தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்க கூடாது'

 'பெற்றோர் தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்க கூடாது'

 'பெற்றோர் தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்க கூடாது'

ADDED : டிச 01, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
திருவொற்றியூர்: ''பெற்றோர் தங்களின் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்,''என, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞான ராஜசேகரன் பேசினார்.

திருவொற்றியூர் பாரதி பாசறையின், 41ம் ஆண்டு பாரதி நேரு தேசிய கலைவிழா போட்டிகள், திருவொற்றியூரில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.

இதில், 30 பள்ளிகளைச் சேர்ந்த, 180க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

போட்டிகளில் திருவொற்றியூர் - ரேவூர் பத்மநாபா பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

திரைப்பட இயக்குநரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஞான ராஜசேகரன், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது :

சில ஆண்டுகளுக்கு முன், மதிப்பெண்கள் என்ற கோணத்திலேயே பிள்ளைகளை, பெற்றோர் நிர்பந்தித்தனர். ஆனால், இன்று காலம் மாறியுள்ளது.

கல்வி அறிவு மட்டும் போதாது; பிற துறைகள் சார்ந்த அறிவும் தேவை என்பதை உணர்ந்துள்ளனர்.

பிறதுறை சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது கூடுதல் திறன் கிடையாது; வாழ்க்கைக்கான பாடம்.

குழந்தைகளிடம் திறமைகளை கண்டறிந்து, பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றோர் தங்களின் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது.

ஐ.ஏ.எஸ்., போன்ற தேர்வுகளில், உளவியல் ரீதியாக எப்படி அணுகுகின்றனர் என்பதை கவனிக்கின்றனர். இதற்கு உங்கள் கூடுதல் திறன் மிக அவசியம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சிவாலயம் மோகன், பாசறை நிறுவனர் மா.கி.ரம ணன், கவுரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஆலோசகர் நீலகண்டன், தலைவர் தியாககுமார், செயலர் மோகன்குமார், பொருளாளர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us