ADDED : மார் 20, 2025 12:42 AM

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமில், நேற்று பொதுமக்கள் 26 பேரிடமிருந்து, கமிஷனர் அருண் மனுக்களை பெற்றார்.
இந்த மனுக்களுக்கு உரிய தீர்வு காணும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டார்.
மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறுித்த விபரத்தை, தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது, துணை கமிஷனர் மேகலீனா ஐடன் உடன் இருந்தார்.