Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பள்ளிக்கரணை சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்

பள்ளிக்கரணை சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்

பள்ளிக்கரணை சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்

பள்ளிக்கரணை சந்திப்பில் சிக்னல் இல்லாததால் சிக்கல்

ADDED : ஜன 18, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
பள்ளிக்கரணை, சென்னையில் அதிக போக்குவரத்து உள்ள வழித்தடங்களில் தாம்பரம் - -வேளச்சேரி பிரதான சாலையும் ஒன்று.

பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் இடத்தில், அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் திரும்பிச் செல்கின்றன.

ஆனால், சிக்னல் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு, அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

முக்கியமாக, 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், சாலையின் இரு பக்கத்திலிருந்தும், வலதும் இடதுமாக திரும்பிச் செல்ல வாகனங்கள் காத்திருக்கின்றன.

அப்போது, ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல நினைப்பதால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசி, மோதி விபத்துக்குள்ளாவது தினமும் நடந்தேறுகிறது.

தவிர, இது போன்ற நிகழ்வுகளால் வாகன ஓட்டிகள் இடையே அவ்வப்போது கைகலப்பும் அரங்கேறுகிறது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்த முக்கிய திருப்பத்தில் சிக்னல் அமைத்து, வாகனங்கள் அனைத்தும் முறையாக பயணிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், கோரிக்கை எழுப்பி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us