Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மகோத்சவம் விமரிசை

ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மகோத்சவம் விமரிசை

ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மகோத்சவம் விமரிசை

ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மகோத்சவம் விமரிசை

ADDED : செப் 26, 2025 02:26 AM


Google News
சென்னை, ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா ஸ்வாமி வித்யா மந்திர் வளாகத்தில், காஞ்சி மடாபதிபதிகள், நவராத்திரி மகோத்சவத்தை நடத்தி வருகின்றனர்.

காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தாம்பரம் அடுத்த ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் வளாகத்தில், சாரதா நவராத்திரி மகோத்வத்தை நடத்தி வருகின்றனர்.

நவராத்திரி விழாவையொட்டி வழக்கமான சந்திரமவுலீஸ்வரர் மூன்று கால பூஜையும், காலை மற்றும் இரவில் நவாவர்ண பூஜையும் நடத்தி வருகின்றனர்.

நவராத்திரிக்காக நிறுவப்பட்டிருக்கும் விசேஷ யாக சாலையில், ஸ்ரீவித்யா ஹோமம், சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ேஹாமங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

ராஜகீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா ஸ்வாமி வித்யா மந்திரில், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின்படி ஒரு வித்யா சாலையும், ஒரு வேத பாட சாலையும் செயல்பட்டு வருகிறது. பாடசாலையில் சேர்க்கப்படும் மாணவர்கள் பள்ளி கல்வியும் கற்று வருகின்றனர்.

இந்த வளாகத்தில் கணபதி கோவில், காமாட்சி அம்மன் கோவில், சிவன் கோவில் ஆகியவை நிறுவப்பட்டு, தினமும் பூஜைகள் நடக்கின்றன.

'நவராத்திரி விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, ராஜகீழ்பாக்கம் காஞ்சி மஹா ஸ்வாமி வித்யா மந்திர் தலைவர் டாக்டர் வி.சங்கர் தெரிவித்து உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us