Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 3 மண்டலங்களில் கழிவுநீர் வெளியேறலாம்

3 மண்டலங்களில் கழிவுநீர் வெளியேறலாம்

3 மண்டலங்களில் கழிவுநீர் வெளியேறலாம்

3 மண்டலங்களில் கழிவுநீர் வெளியேறலாம்

ADDED : மே 23, 2025 12:19 AM


Google News
சென்னை, மாதவரம் மண்டலம், ஜி.என்.டி., சாலை மற்றும் சந்திரபிரபு காலனியில், 900 மி.மீ., விட்டம் உடைய கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதை சரி செய்யும் பணி, இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதனால், மாதவரம், திரு.வி.க. நகர், அம்பத்துார் ஆகிய மண்டலங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.

இதனால், மூன்று மண்டலங்களில் இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது.

அவ்வாறு நிகழ்ந்தால், மாதவரம் - 81449 30903, திரு.வி.க., நகர் - 81449 30906, அம்பத்துார் - 81449 30907 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். லாரியில் கழிவுநீர் வெளியேற்றப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us