Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயில்வே குடியிருப்பில் வசிப்போரை அப்புறப்படுத்த எஸ்.ஆர்.எம்.யு., எதிர்ப்பு

ரயில்வே குடியிருப்பில் வசிப்போரை அப்புறப்படுத்த எஸ்.ஆர்.எம்.யு., எதிர்ப்பு

ரயில்வே குடியிருப்பில் வசிப்போரை அப்புறப்படுத்த எஸ்.ஆர்.எம்.யு., எதிர்ப்பு

ரயில்வே குடியிருப்பில் வசிப்போரை அப்புறப்படுத்த எஸ்.ஆர்.எம்.யு., எதிர்ப்பு

ADDED : அக் 05, 2025 01:49 AM


Google News
சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசிப்போருக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் அப்புறப்படுத்தும் ரயில்வேயின் முடிவுக்கு, எஸ்.ஆர்.எம்.யு., கண்டனம் தெரிவித்துள்ளது.

வண்ணாரப்பேட்டையில் உள்ள ரயில்வே காலனியில், 64 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் பாதுகாப்பு குறைபாட்டை காரணம் காட்டி, அங்கு வசிப்போருக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அக்கட்டடங்களை இடித்து அகற்ற, சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது.

இதற்கு, எஸ்.ஆர்.எம்.யு., எனும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் கண்டனம் தெரிவித்து, நேற்று கண்டன கூட்டத்தை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

எஸ்.ஆர்.எம்.யு.,வின், சென்னை கோட்ட செயலர் பால் மாக்ஸ்வெல் ஜான்சன் அளித்த பேட்டி:

வண்ணாரப்பேட்டை ரயில்வே காலனியில், 64 குடியிருப்புகளில் இருப்போரை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. கட்டி முடித்து சில ஆண்டுகளே ஆன நிலையில், பாதுகாப்பற்ற கட்டடங்கள் என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

ரயில்வே ஊழியர்கள், குடும்பத்தினருக்கு, இதே பகுதியில் மாற்று குடியிருப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us