Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுவனிடம் வழிப்பறி மூவர் கைது

சிறுவனிடம் வழிப்பறி மூவர் கைது

சிறுவனிடம் வழிப்பறி மூவர் கைது

சிறுவனிடம் வழிப்பறி மூவர் கைது

ADDED : மே 13, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
கே.கே.நகர் :அசோக் நகர் 81வது தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல், 17. கடந்த 10ம் தேதி இரவு மருந்து வாங்க, கே.கே.நகர், சிவலிங்கபுரம் 86வது தெருவில் வந்து சென்றார்.

அங்கு வந்த அறிமுகமான குமார், மோனிஷ் உட்பட மூன்று பேர், சாமுவேலை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறவே, மூவரும் சேர்ந்து சாமுவேலை கத்தியால் தாக்கி, 500 ரூபாய் பறித்து சென்றனர்.

இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், பெரம்பூரைச் சேர்ந்த குமார், 19, அசோக் நகரைச் சேர்ந்த மோனிஷ், 22, மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. குமார் மீது ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகளும்; மோனிஷ் மீது நான்கு குற்ற வழக்குகளும் உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us