ADDED : ஜன 16, 2024 11:59 PM

சென்னை மாநகராட்சி ஆறாவது மண்டலமான திரு.வி.க.நகர், கொளத்துார் பகுதியில் தெரு பெயர் பலகைகள் மக்கள் பயன்படும் வகையில் இன்றி போஸ்டர் ஒட்டும் இடமாக பயன்பட்டு வருகிறது. 65வது வார்டு சாஸ்திரி நகர் உள்ளிட்ட பல இடங்களில் தெரு பெயர் பலகைகளில் பெயர் அழிந்துள்ளன. இந்நிலையில் ராஜேஸ்வரி நகரில் உள்ள தெரு பெயர் பலகைகள் சிலவற்றை குப்பை போல துாக்கி வீசியுள்ளனர். தெருக்களின் பெயர் பலகைகளை அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
மணி, கொளத்துார்.


