Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தங்கிய வீட்டில் ஏழு சவரன் திருடிய பெண் கைது

தங்கிய வீட்டில் ஏழு சவரன் திருடிய பெண் கைது

தங்கிய வீட்டில் ஏழு சவரன் திருடிய பெண் கைது

தங்கிய வீட்டில் ஏழு சவரன் திருடிய பெண் கைது

ADDED : ஜூன் 28, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
திருமங்கலம்:தங்கியிருந்த வீட்டில் ஏழு சவரன் தங்க நகைளை திருடி, கவரிங் நகைகளை மாற்றி வைத்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

அண்ணா நகர் மேற்கு, இரண்டாவது தெருவில் வசிப்பவர் சுமதி, 55; அதே பகுதியில் ஒரு ஹோட்டலில் துாய்மை பணியாளர்.

இவருடன் பணிபுரியும் அம்பத்துாரைச் சேர்ந்த லதா, 47, என்பவர், தான் தங்கியிருந்த அறையில் தண்ணீர் வரவில்லை எனக்கூறி, சுமதி வீட்டில் தங்கினார்.

கடந்த, மே 11ம் தேதி, சொந்த ஊரான மதுரைக்கு சென்றவர் பின் பணிக்கு திரும்பவில்லை.

சந்தேகமடைந்த சுமதி, வீட்டில் வைத்திருந்த நகைகளை சோதித்தபோது, ஏழு சவரன் தங்க நகைகளுக்கு பதிலாக அதேபோல் செய்யப்பட்ட போலி கவரிங் நகைகள் இருந்துள்ளன.

இதுகுறித்து விசாரித்த திருமங்கலம் போலீசார், ஒரு மாதத்திற்கு பின் லதாவை கைது செய்தனர்.

விசாரணையில், சுமதி வீட்டில் தங்கியபோது, தங்க நகைகளை கழற்றி வைப்பதை கண்காணித்து, அவற்றை எடுத்து கவரிங் நகைகளை வைத்ததை லதா ஒப்புக்கொண்டார்.

திருடிய நகைகளை அடகு வைத்து, பணத்தை செலவு செய்ததும் தெரிந்தது. அடகு வைத்த ஏழு சவரன் நகைளை போலீசார் பறிமுதல் செய்து, லதாவை நேற்று சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us