/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுற்றுச்சூழல் தின விழா பள்ளியில் கொண்டாட்டம் சுற்றுச்சூழல் தின விழா பள்ளியில் கொண்டாட்டம்
சுற்றுச்சூழல் தின விழா பள்ளியில் கொண்டாட்டம்
சுற்றுச்சூழல் தின விழா பள்ளியில் கொண்டாட்டம்
சுற்றுச்சூழல் தின விழா பள்ளியில் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 05, 2024 08:47 PM

உடுமலை: பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில், சுற்றுச்சூழல் தின விழா கொாண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் மருதமுத்து சுற்றுச்சூழல் தினம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பள்ளி வளாகத்தில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர். மரம் வளர்ப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து என்.எஸ்.எஸ்., மாணவி கவி வர்ஷினி நன்றி தெரிவித்தார்.