Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாவுக்கு நீடிக்கும் தடை

கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாவுக்கு நீடிக்கும் தடை

கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாவுக்கு நீடிக்கும் தடை

கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாவுக்கு நீடிக்கும் தடை

ADDED : ஜூன் 26, 2024 09:51 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதால், கவியருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே ஆழியாறு மற்றும் வால்பாறை பகுதிக்கு, அதிகப்படியான சுற்றுலாப் பயணியர் சென்று திரும்புகின்றனர். ஆழியாறில் உள்ள கவியருவி, தண்ணீர் வரத்து இல்லாததால், கடந்த ஜன., மாதம் மூடப்பட்டது.

கடந்த மே மாதம் கோடை மழை பொழிவால், அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. அதன்பின், மழைப்பொழிவு இல்லாததால் நீர்வரத்து இன்றி காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக, வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகள், மழை பெய்வதால், கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி, சுற்றுலாப்பயணியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பதால், பலரும் அங்கு வந்து ஏமாற்றத்துடனும் திரும்பிச்செல்கின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'சுற்றுலாப்பயணியர் அருவிக்குச்செல்லவும், குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, தொடர் மழையால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us