Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு

வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு

வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு

வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு

ADDED : ஜூலை 16, 2024 11:19 PM


Google News
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறப்பு நடைபெற்றது.

ஆடிக்குண்டம் விழா, வருகிற 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்க உள்ளது. 26ம் தேதி லட்சார்ச்சனையும், 27ல் கிராம சாந்தியும், 28ல் கொடியேற்றமும் நடைபெற உள்ளது. 29ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 30ம் தேதி காலை குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது.

இவ்விழாவை முன்னிட்டு கோவில் முன்பு, குண்டம் கண் திறக்கும் வைபவம் நேற்று காலை நடந்தது. குண்டத்தைச் சுற்றி பூக்களால் அலங்காரம் செய்தனர். கோவில் பூசாரி, குண்டத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்தார். கோவில் தக்கார் மேனகா, கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் மண்வெட்டியால், குண்டம் கண் திறந்து வைத்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

_____

படங்கள் திரு பாலாஜி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us