/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்று : அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தகவல் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்று : அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்று : அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்று : அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்று : அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
ADDED : ஜூலை 14, 2024 03:09 PM
பொள்ளாச்சி: 'பொள்ளாச்சியில், மத்திய, மாநில பணிக்கால ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் உயிர் வாழ் சான்று வீடு தேடி வழங்கப்படும்,' என, பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினி பேகம் அறிக்கை வருமாறு:
மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க வேண்டியுள்ளது.
நேரில் சென்று உயிர் வாழ் சான்று சமர்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட்மேன் வங்கி' ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தியும், முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்களது பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல்போன் எண், பி.பி.ஓ., எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணமாக, 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
தமிழக அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்களது பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.