ADDED : ஜூன் 27, 2024 10:13 PM
கோவை : மத்திய அரசு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை, வரும் ஜூலை முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. இதற்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில், 27 மற்றும் 28ம் தேதி, கோவை வக்கீல் சங்கம் சார்பில் நீதிமன்றங்களை புறக்கணிக்க முடிவுசெய்திருந்தனர்.
அதன்படி, கோவையிலுள்ள, 3,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.