/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுமிக்கு திருமணம் அதிகாரிகள் தாமதம் சிறுமிக்கு திருமணம் அதிகாரிகள் தாமதம்
சிறுமிக்கு திருமணம் அதிகாரிகள் தாமதம்
சிறுமிக்கு திருமணம் அதிகாரிகள் தாமதம்
சிறுமிக்கு திருமணம் அதிகாரிகள் தாமதம்
ADDED : ஜூலை 14, 2024 05:36 PM
போத்தனூர்:
சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையம், அம்மணி அம்மாள் காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் தினேஷ்குமார், 23; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், உறவினர் மகளான, 16 வயது சிறுமிக்கும் நேற்று மாச்சம்பாளையத்திலுள்ள ஒரு கோவிலில், திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, மதுக்கரை சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதிகாரி அமுதா, குழந்தைகள் நல அலுவலர் கிருஷ்ணகுமாரியுடன், குறிப்பிட்ட கோவிலுக்கு சென்றார். ஆனால் அதிகாரிகள் செல்லும் முன் திருமணம் நடந்து முடிந்தது.
இதையடுத்து, அதிகாரி அமுதா சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.