Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை பெய்யும்'

'தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை பெய்யும்'

'தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை பெய்யும்'

'தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை பெய்யும்'

ADDED : ஜூலை 15, 2024 11:48 PM


Google News
கோவை;கோவையில் தென்மேற்கு பருவமழை இதுவரை, 47 மி.மீ., பெய்துள்ளதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சத்திய மூர்த்தி தெரிவித்தார்.

வழக்கமாக, தென் மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்., வரை பெய்வது வழக்கம். நடப்பாண்டில், ஜூன் முதல் வாரம் பருவ மழை துவங்கியதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கோவையை பொறுத்த வரையில், ஜூன் மாதம் 27 மி.மீ., ஜூலை மாதம் 20 மி.மீ., மழை தற்போது வரை பெய்துள்ளது. இந்த வாரம் மேலும் சில நாட்கள் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக, காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சத்திய மூர்த்தி கூறுகையில், ''கோவையில், வழக்கமாக ஜூன் மாதம், 37 மி.மீ., ஜூலை மாதம், 44 மி.மீ., மழை பொழிவு இருக்கும்.

ஜூன் மாதம், பெரிய அளவில் இல்லை எனினும் 27 மி.மீ., மழை பெய்துள்ளது. ஜூலை மாதம் இதுவரை 20 மி.மீ., பெய்துள்ளது. வரும் நாட்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. செப்., வரை தென்மேற்கு பருவ மழை தொடரும், '' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us