Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூடுதல் நுகர்வோர் குறைதீர்  ஆணைய விசாரணை துவக்கம்

கூடுதல் நுகர்வோர் குறைதீர்  ஆணைய விசாரணை துவக்கம்

கூடுதல் நுகர்வோர் குறைதீர்  ஆணைய விசாரணை துவக்கம்

கூடுதல் நுகர்வோர் குறைதீர்  ஆணைய விசாரணை துவக்கம்

ADDED : ஜூன் 19, 2025 05:52 AM


Google News
கோவை : கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆணையத்தில், 500 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு தேக்கத்தை குறைக்கும் வகையில், கோவையில் கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அமைக்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்காக நுகர்வோர் ஆணைய அலுவலகத்தில், தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நுகர்வோர் ஆணையத்தில், நேற்று முதல் விசாரணை துவங்கியது.

முதல் கட்டமாக, கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு, 60 வழக்குகளின் கட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக, தனி ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில், விசாரணை நடைபெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us