Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழைத்தார் வரத்து சரிவு விலை உயர்வால் நிம்மதி

வாழைத்தார் வரத்து சரிவு விலை உயர்வால் நிம்மதி

வாழைத்தார் வரத்து சரிவு விலை உயர்வால் நிம்மதி

வாழைத்தார் வரத்து சரிவு விலை உயர்வால் நிம்மதி

ADDED : மார் 20, 2025 11:22 PM


Google News
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், விவசாய நிலத்தில் தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

கேரள வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் வருகை அதிகமுள்ளதால், ஏலத்தில் வாழைத்தாருக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நேந்திரன் ஒரு கிலோ - 40, ரஸ்தாலி --- 45, பூவன் --- 40, சாம்பிராணி வகை வாழை --- 40, கதளி --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது பூவன் வகை வாழைத்தார் ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் விலை அதிகரித்தும், கதளி 5 ரூபாய் விலை சரிந்தும் காணப்பட்டது.

வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் நேற்று ஏலத்துக்கு குறைவான அளவிலேயே வாழைத்தார் வரத்து இருந்தது. மேலும், செவ்வாழை வாழைத்தார் வரத்து இல்லை. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us