Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழைத்தார் விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி

வாழைத்தார் விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி

வாழைத்தார் விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி

வாழைத்தார் விலை சரிவு; விவசாயிகள் அதிருப்தி

ADDED : அக் 10, 2025 10:35 PM


Google News
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னை விவசாயத்தில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேந்திரன், செவ்வாழை, பூவன், சாம்பிராணி, கதளி வகை வாழை சாகுபடி செய்துள்ளனர்.

அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை, கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றர். மார்க்கெட்டில் நடந்த ஏலத்தில், செவ்வாழை கிலோ - - 65 ரூபாய், நேந்திரன் --- 25, கதளி --- 25, பூவன் --- 35, ரஸ்தாளி --- 40, சாம்பிராணி --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது செவ்வாழை, கதளி, பூவன் ஆகிய வாழைத்தார்கள் கிலோவுக்கு, 5 ரூபாயும், ரஸ்தாளி - 2 ரூபாயும் விலை சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'தினசரி மார்க்கெட்டில் கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம் வாழைத்தார் விலை குறைந்து காணப்பட்டது. மொத்தமாக, 150 வாழைத்தார்கள் மட்டுமே வரத்து இருந்தது. இந்நிலையில், விலையும் சரிந்ததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். வரும் நாட்களில் வாழைத்தார் விலை அதிகரிக்கும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us