Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பத்திரம் தொலைத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

 பத்திரம் தொலைத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

 பத்திரம் தொலைத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

 பத்திரம் தொலைத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

ADDED : டிச 04, 2025 08:16 AM


Google News
கோவை: இருகூரை சேர்ந்த விஜயகுமார், மனைவி தனம், மகன் ஸ்ரீவசந்த் ஆகியோர் சேர்ந்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள, பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில்(ஆர்ஏசிபிசி),2014 பிப்.,15ல், 42 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கினர்.

இதற்காக அசல் சொத்து பத்திரத்தை அடமானமாக கொடுத்தனர். கடன் முழுவதும் செலுத்திய பிறகு, சொத்து அசல் பத்திரத்தை திரும்பிதருமாறு கேட்ட போது, தொலைந்து விட்டதாக வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட விஜயகுமார் மற்றும் குடும்பத்தினர் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரின் புகார் பகுதியாக அனுமதிக்கப்படுகிறது. மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us