Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழுதுநீக்கும் மின் பணியாளர்கள் 'அலர்ட்' அறிவுறுத்தும் வாரிய அதிகாரிகள்

பழுதுநீக்கும் மின் பணியாளர்கள் 'அலர்ட்' அறிவுறுத்தும் வாரிய அதிகாரிகள்

பழுதுநீக்கும் மின் பணியாளர்கள் 'அலர்ட்' அறிவுறுத்தும் வாரிய அதிகாரிகள்

பழுதுநீக்கும் மின் பணியாளர்கள் 'அலர்ட்' அறிவுறுத்தும் வாரிய அதிகாரிகள்

ADDED : அக் 21, 2025 08:16 PM


Google News
பொள்ளாச்சி: மழையின் போது, மின்பழுது நீக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், பருவமழை துவங்கியுள்ளதால், அவ்வபோது, மின் சப்ளையில் தடங்கல் ஏற்படுகிறது.

காற்று பலமாக வீசும் போதும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போதும் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்படும். கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த மழையால் சில வீடுகளுக்கான மின் இணைப்பில் பழுது ஏற்பட்டது.

இந்நிலையில், மழையின்போது, ஒயர்மேன்கள், போர்மேன்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் பழுது நீக்கம் பணியில் ஈடுபட்டால், மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

பருவமழை காலத்தில், மின் பழுது நீக்க மின்கம்பங்களில் ஏறும் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எனவே, மின்வாரிய பணியாளர்கள், மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் பழுது நீக்க முயற்சிக்கும் போது, அந்தந்த டிரான்ஸ்பார்மரில் மின்சப்ளையை நிறுத்தியதை உறுதி செய்த பிறகே, கம்பங்களில் ஏறி, பழுது நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் உரிய உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின்றி பழுது நீக்க பணிகள் செய்ய கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us