Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காபி செடிகளில் பூப்பிடிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

காபி செடிகளில் பூப்பிடிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

காபி செடிகளில் பூப்பிடிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

காபி செடிகளில் பூப்பிடிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : மார் 21, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
வால்பாறை,; வால்பாறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, காபி செடிகளில் நடப்பாண்டு சீசனுக்கு பூப்பிடித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறையில், மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் காபி மட்டும் 4,517 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால், வால்பாறையில் நடப்பாண்டு சீசனில் காபி செடிகளில் பூக்கள் பூத்துகுலுங்குகின்றன.

தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை மலைப்பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக காபி பயிரிடப்பட்டுள்ளது. ரொபஸ்டா, அரபிக்கா காபி வகைகள் பல்வேறு எஸ்டேட்களில் பயிரிடப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் காபி செடிகளில் பூவெடுத்து, காய்க்க துவங்கும். நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை காபி அறுவடை செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு சீதோஷ்ணநிலை மாற்றத்தால், மார்ச் மாதமே காபி செடிகளில் பூப்பிடித்துள்ளது. மே மாத இறுதிக்குள் காபி பழங்கள் பறிக்கும் பணி நிறைவடையும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us