Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஐ.டி.ஐ., படிக்க அழைக்கிறார் கலெக்டர்

ஐ.டி.ஐ., படிக்க அழைக்கிறார் கலெக்டர்

ஐ.டி.ஐ., படிக்க அழைக்கிறார் கலெக்டர்

ஐ.டி.ஐ., படிக்க அழைக்கிறார் கலெக்டர்

ADDED : ஜூன் 19, 2025 04:19 AM


Google News
கோவை: கோவை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர, மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கை:

கோவை அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் எலக்ட்ரீசியன், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், டெக்னீசியன், மெக்கட்ரானிக்ஸ் உள்ளிட்ட ஏராளமான தொழிற்பிரிவு படிப்புகளுக்கு, 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, நாளை(இன்று) முதல் துவங்குகிறது.

சேர விரும்புவோர், எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், கோவை - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, கோவை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம், ஆனைக்கட்டி மற்றும் வால்பாறையிலுள்ள, சேர்க்கை உதவி மையங்களை அணுகி, சேர்க்கை ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us