Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறு

பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறு

பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறு

பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறு

ADDED : அக் 14, 2025 09:10 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; தீபாவளி பண்டிகையையொட்டி, பொள்ளாச்சி மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது.ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள்; தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.

பொள்ளாச்சி சந்தையிலிருந்து, பெரும்பாலும் கேரளாவுக்கு மாடுகள், வளர்ப்பு மற்றும் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன. நேற்று கூடிய சந்தையில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. நேற்று வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மாட்டு வியாபாரிகள் கூறுகையில், 'நேற்று சந்தையில், 3,000 மாடுகள் விற்பனைக்காக வந்தன. நாட்டு பசு மாடுகள், 45 -50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. எருமை, 45 - -50 ஆயிரம், காங்கேயம் காளை, 65 - 70 ஆயிரம், முரா, 65 - 70 ஆயிரம், ஜெர்சி 25- 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தீபாவளி பண்டிகையையொட்டி கேரளா வியாபாரிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால், விற்பனை விறுவிறுப்பாக இருந்தது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us