ADDED : அக் 02, 2025 12:39 AM

வடவள்ளி; முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கருதப்படுகிறது.
இக்கோயிலில், நவராத்திரி விழாவையொட்டி, செப்., 22ல் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அடங்கிய கொலு வைக்கப்பட்டது. நாள்தோறும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது.ஆயுத பூஜை விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால், நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


