Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மத்திய ரிசர்வ் படைவீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

மத்திய ரிசர்வ் படைவீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

மத்திய ரிசர்வ் படைவீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

மத்திய ரிசர்வ் படைவீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

ADDED : அக் 12, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஆழியாறு அணையில், மத்திய ரிசர்வ் படை வீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை தொப்பம்பட்டி மத்திய ரிசர்வ் படை பயிற்சி கல்லுாரியில், போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

கமாண்டர் ஜென்சன். துணை கமாண்டர் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் என, 8 பயிற்சியாளர்கள் இணைந்து, 89 வீரர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயற்சி அளித்தனர்.

அதில், நிலநடுக்கம், மழை, வெள்ள காலங்களில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது, முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், டிரம், கேன் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு உருவாக்கப்பட்ட படகில் அணையின் மையப்பகுதிக்குச்சென்று, அங்கு நீரில் தத்தளிக்கும் நபர்களை மீட்டு, கரைக்கு திரும்புவது போன்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தவிர, பாதுகாப்பாக, கரைக்கு கொண்டு வந்து விபத்தில் சிக்கியவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள் குறித்தும் செய்து காண்பிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us