/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுந்தராபுரம் சந்திப்பில் தயவு தாட்சண்யமின்றி... ஆக்கிரமிப்புகளை துாக்கி வீச வேண்டும்! l அப்போதுதான் 'யூ டேர்ன்' சாத்தியமாகும்சுந்தராபுரம் சந்திப்பில் தயவு தாட்சண்யமின்றி... ஆக்கிரமிப்புகளை துாக்கி வீச வேண்டும்! l அப்போதுதான் 'யூ டேர்ன்' சாத்தியமாகும்
சுந்தராபுரம் சந்திப்பில் தயவு தாட்சண்யமின்றி... ஆக்கிரமிப்புகளை துாக்கி வீச வேண்டும்! l அப்போதுதான் 'யூ டேர்ன்' சாத்தியமாகும்
சுந்தராபுரம் சந்திப்பில் தயவு தாட்சண்யமின்றி... ஆக்கிரமிப்புகளை துாக்கி வீச வேண்டும்! l அப்போதுதான் 'யூ டேர்ன்' சாத்தியமாகும்
சுந்தராபுரம் சந்திப்பில் தயவு தாட்சண்யமின்றி... ஆக்கிரமிப்புகளை துாக்கி வீச வேண்டும்! l அப்போதுதான் 'யூ டேர்ன்' சாத்தியமாகும்

கிடப்பில் போடப்பட்ட திட்டம்
இதற்கு தீர்வு காண, சுந்தராபுரம் சந்திப்பை கடக்கும் பகுதியில், ஒரு கி.மீ., துாரத்துக்கு ரூ.60 கோடியில் மேம்பாலம் கட்ட வேண்டுமென, 2018ல் அப்போதைய பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன் வலியுறுத்தினார்.
ஆக்கிரமிப்பால் அவஸ்தை
தற்சமயம் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து பெருகி வருவதால், இச்சந்திப்பில் நெருக்கடியான சூழல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி தலைமையிலான குழு ஆய்வு செய்து, 'யூ டேர்ன்' வசதி அமல்படுத்த பரிந்துரைத்தது.
சங்கம் வீதியில் ஆக்கிரமிப்பு
சங்கம் வீதி மற்றும் போத்தனுார் சாரதா மில் ரோடு, 40 - 60 அடி அகலம் கொண்டவை; ஆக்கிரமிப்புகளால் சுருங்கியிருக்கின்றன.
தயவு தாட்சண்யம் கூடாது
இதேபோல், சுங்கம் வீதியில் இருந்து சாரதா மில் ரோட்டில் திரும்பும் இடத்தில் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். திருப்பத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பு இருக்கிறது. அவற்றை இடித்து அகற்ற வேண்டும். மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து ஆவணங்களை ஒப்பிட்டு, ரோட்டை அளவீடு செய்து, தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் ஒருமித்த வேண்டுகோள்.