Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய அளவிலான போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு

தேசிய அளவிலான போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு

தேசிய அளவிலான போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு

தேசிய அளவிலான போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு

ADDED : அக் 10, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்; சண்டிகரில் நடக்கும் தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டியில், தமிழக அணி சார்பில் விளையாட நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரித்தீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவ, மாணவியருக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளை இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப். ஐ.,) நடத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் இப்போட்டிகளில் தேர்வு செய்யப்படும் நபர்கள், விரைவில் சண்டிகாரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதில், 14 வயதுக்கு உட்பட்ட ஹேண்ட்பால் போட்டிக்கான தமிழக அணியில் விளையாட நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் ரித்தீஸ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்போட்டிக்கு கோவை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவர் ரித்தீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரகுநாத், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us