/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருத்துவ சிகிச்சை கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு மருத்துவ சிகிச்சை கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
மருத்துவ சிகிச்சை கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
மருத்துவ சிகிச்சை கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
மருத்துவ சிகிச்சை கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
ADDED : செப் 24, 2025 05:07 AM
கோவை; கோவை, கே.ஜி.சாவடி, மறைமலை அடிகள் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. 2022 முதல், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பிரீமியம் செலுத்தினார். அவரது மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 1.74 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினார். இத்தொகையை வழங்கக்கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் வழங்கவில்லை.
மருத்துவ செலவு தொகை மற்றும் இழப்பீடு வழங்கக்கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் மனைவிக்கான மருத்துவ செலவு தொகை, 1.74 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுப்பதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக 10,000 ரூபாய், வழக்கு செலவு 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.