/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வங்கியில் அடகு வைத்த நகையில் மோசடியா? வங்கியில் அடகு வைத்த நகையில் மோசடியா?
வங்கியில் அடகு வைத்த நகையில் மோசடியா?
வங்கியில் அடகு வைத்த நகையில் மோசடியா?
வங்கியில் அடகு வைத்த நகையில் மோசடியா?
ADDED : செப் 04, 2025 06:21 AM
சூலுார்; சூலுாரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சூலுார் அடுத்த ரங்கநாத புரத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். விஜயலட்சுமி அவசர தேவைக்காக சூலுார் திருச்சி ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், நகைகளை அடகு வைப்பது வழக்கம். அடகு வைத்த தங்க வளையல்களை மீட்க கடந்த மார்ச் மாதம் வங்கிக்கு சென்றார்.
பணத்தை செலுத்தி விட்டு, வளையல்களை வாங்கி பார்த்தபோது, ஐந்தில் நான்கு வளையல்கள் பித்தளையாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதையடுத்து, போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார், ஐந்து மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வந்தனர்.
இந்நிலையில், வங்கி அதிகாரிகள் அதே பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகரை சந்தித்து, இன்றைய தங்கத்தின் விலை என்னவோ அதற்கான தொகையை கொடுப்பதாக வங்கி தரப்பில் கூறி, பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்குமாறு கூறியதாக கூறப் படுகிறது.
இதையடுத்து, முக்கிய பிரமுகர் தரப்பில் விஜயலட்சுமியிடம் சமரசம் பேசியுள்ளனர். இதையடுத்து, தனது புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம், என, போலீசாரிடம் கூறிவிட்டு, வங்கியில் பணத்தை பெற்றுக்கொண்டு, போலீசில் கடிதம் எழுதி கொடுத்ததாக கூறப் படுகிறது.
இச்சம்பவம், வங்கி வாடிக்கையாளர்களிடையே சந்தேகத்தை எழுப்பி உள்ளது. தாங்கள் அடகு வைத்த நகைகளின் நிலை என்ன என்ற அச்சத்தில் உள்ளனர்.