ADDED : செப் 30, 2025 11:22 PM
கோவை; மாநகராட்சி, கணபதி பகுதியில் உள்ள 19, 20, 29, 30, 31, 47, 48வது வார்டுகளில், நிலங்களை நவீன நில அளவை கருவிகளான 'டிரோன்' மற்றும் 'ஜிபிஎஸ்' கருவிகள் உதவியுடன் நகர்ப்புற வாழ்விடங்களுக்கான, தேசிய புவியிட அறிவுசார் நில அளவை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நில உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன், நில அளவை செய்யும் இடத்திலும், பின்னர் அழைக்கப்படும்போதும் ஆஜராக வேண்டும். அனைத்து பணிகளும் முடிவடைந்த பின், ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள் நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும் என, கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.


