/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சக்தி மாரியம்மன் கோவிலில் 11ல் மகா கும்பாபிேஷகம் சக்தி மாரியம்மன் கோவிலில் 11ல் மகா கும்பாபிேஷகம்
சக்தி மாரியம்மன் கோவிலில் 11ல் மகா கும்பாபிேஷகம்
சக்தி மாரியம்மன் கோவிலில் 11ல் மகா கும்பாபிேஷகம்
சக்தி மாரியம்மன் கோவிலில் 11ல் மகா கும்பாபிேஷகம்
ADDED : செப் 03, 2025 11:08 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆ.சங்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் வரும், 11ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே, ஆ.சங்கம்பாளையத்தில் விநாயகர், சக்திமாரியம்மன், முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகம் வரும், 11ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, வரும், 9ம் தேதி, இரவு, 8:00 மணிக்கு வாஸ்துசாந்தியுடன் கும்பாபிேஷக விழா துவங்குகிறது.
வரும், 10ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், முளைப்பாலிகை, தீர்த்தகலசம் அழைத்து வருவதல், கோபுர கலசம் வைத்தல் மற்றும் மண் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு, முதற்கால யாக வேள்வி, விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கும்ப பூஜை, கும்ப அலங்காரம், திருக்குடங்கள் கோவிலைச் சுற்றி வருதல், கலசங்களை யாகசாலையில் நிறுவுதல், 108 மூலிகை பொருட்களை குண்டத்தில் சமர்ப்பித்தல் நடக்கிறது.
வரும், 11ம் தேி காலை, 5:50 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, விநாயகர் பூஜை, வேதிகார்ச்சனை, ஹோமங்கள், காலை, 9:05 மணிக்கு மகாபூர்ணாஹுதி, யாத்தரதானம், கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வருதல்; காலை, 9:30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், காலை, 10:30 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடக்கிறது.
தொடர்ந்து, மகா அபிேஷகம், கோ பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.