Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எலக்ட்ரீசியன் சாவில் மர்மம்; உறவினர்கள் முற்றுகை போராட்டம்

எலக்ட்ரீசியன் சாவில் மர்மம்; உறவினர்கள் முற்றுகை போராட்டம்

எலக்ட்ரீசியன் சாவில் மர்மம்; உறவினர்கள் முற்றுகை போராட்டம்

எலக்ட்ரீசியன் சாவில் மர்மம்; உறவினர்கள் முற்றுகை போராட்டம்

ADDED : செப் 30, 2025 12:41 AM


Google News
அன்னுார்; தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி இறந்தார். இதைக் கண்டித்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஓரைக்கால் பாளையத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ஸ்ரீ ராமன், 45. எலக்ட்ரீசியன். இவர் கடந்த ஐந்து மாதங்களாக குப்பேபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 27ம் தேதி மாலை பணி புரியும் இடத்தில் லிப்டிலிருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார் என கம்பெனி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் இறந்த ஸ்ரீ ராமனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தனியார் நிறுவனம் முன்பு கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ ராமன் இறப்பில் மர்மம் உள்ளது. மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். உடனே சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர். போலீசார் பேச்சு நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

அன்னுார் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us