Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

ADDED : அக் 20, 2025 10:07 PM


Google News
வால்பாறை: வால்பாறையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் குப்பை அகற்றாததால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

வால்பாறை நகராட்சியில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி படிப்படியாக நடக்கிறது.

வால்பாறை நகரில் மட்டும், 2,429 வீடுகள் உள்ளன. துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை தரம் பிரித்து பெறுவதை கண்காணிக்க இரண்டு பரப்புரையாளர், ஐந்து மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறை நகரில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. குறிப்பாக, ஸ்டேன்மோர் ரோடு, படகுசவாரி செல்லும் ரோட்டிலும், வால்பாறை நகரை ஒட்டியுள்ள ஆறுகளிலும் குப்பை கொட்டப்பட்டுள்ளது. திறந்தவெளியில் குப்பை குவித்ததால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பை உள்ளிட்ட கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை தரம் பிரித்து பெறுவதை முறையாக குப்பைக்கிடங்கில் கொட்ட வேண்டும். திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us