Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராயல்ஓக் பர்னிச்சரின் இரண்டாவது கடை திறப்பு

ராயல்ஓக் பர்னிச்சரின் இரண்டாவது கடை திறப்பு

ராயல்ஓக் பர்னிச்சரின் இரண்டாவது கடை திறப்பு

ராயல்ஓக் பர்னிச்சரின் இரண்டாவது கடை திறப்பு

ADDED : மே 27, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
கோவை; கோவையில், ராயல்ஓக் பர்னிச்சரின் இரண்டாவது கடை, சரவணம்பட்டியில் திறக்கப்பட்டுள்ளது.

ராயல்ஓக் இன்கார்ப்பரேஷன் தலைவர் விஜய் சுப்ரமணியம் கூறியதாவது:

தமிழகத்தில், 30 கடைகளுடன் செயல்பட்டு வருகிறோம். கோவையில் இரண்டாவது கடை சத்தி ரோடு, சரவணம்பட்டி, மருதம் டவர்ஸில் துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், இது 180வது கடை ஆகும்.

10 ஆயிரம் சதுரடி பரப்பில் அமைந்துள்ள இக்கடையில் லிவிங் ரூம், பெட்ரூம், டைனிங் பகுதி, படிப்பு மற்றும் அலுவலகம், வெளிப்பகுதி, வீட்டு அலங்கார பொருட்கள், மெத்தைகள் உள்ளிட்ட பர்னிச்சர் தொகுப்புகள் உள்ளன.

இவ்வாறு, அவர்கூறினார்.

ராயல்ஓக் இன்கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனர் மதன் சுப்ரமணியம், இயக்குனர்கள் மகேஷ்வரி, பிரீதி, ராயல்ஓக் பிரான்சைஸி தலைவர் கிரண் சாப்ரியா, தம்மைய்யா கோடேரா, பிராந்திய பிரான்சைஸி தலைவர் ரஞ்சித் கட்பட்டு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us