Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு

ADDED : அக் 12, 2025 10:27 PM


Google News
Latest Tamil News
வால்பாறை; கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சஷ்டி நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், தேவியடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர்.

பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வால்பாறை அடுத்துள்ள முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் புரட்டாசி மாத சஷ்டி பூஜையையொட்டி, முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us