Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ படிக்கட்டுகளில் வழுக்கல் பிளீச்சிங் பவுடர் துாவணும்!

படிக்கட்டுகளில் வழுக்கல் பிளீச்சிங் பவுடர் துாவணும்!

படிக்கட்டுகளில் வழுக்கல் பிளீச்சிங் பவுடர் துாவணும்!

படிக்கட்டுகளில் வழுக்கல் பிளீச்சிங் பவுடர் துாவணும்!

ADDED : ஜூன் 19, 2025 07:54 AM


Google News
வால்பாறை : குடியிருப்பு பகுதியில் உள்ள வழுக்கல் நிறைந்த படிக்கட்டுகளில் பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, தென்மேற்குப் பருவமழை பெய்கிறது. வால்பாறை நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள் வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது.

இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நடைபாதையில் நடந்து செல்லும் போது, கிழே விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் பருவமழை பெய்யும் நிலையில், பல்வேறு இடங்களில் கால்வாய் கூட இல்லாததால், மழை நீர் நடைபாதை வழியாக செல்கிறது. இதனால் மக்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகள் வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது. நகராட்சி சார்பில் வழுக்கல் நிறைந்த அனைத்துப்பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us