ADDED : ஜன 20, 2024 08:31 PM
கோவை:கோவை மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில், வேளாண் துறையின் வாயிலாக பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
சிறு, குறு விவசாயிகள், தங்கள் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. தென்னை, தானிய வகைகள், பயிறு வகைகள், கரும்பு, எண்ணெய் வித்துக்கள், மற்றும் தீவனப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன் பெறலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


