Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தக்காளி விலை உயர்வு விவசாயிகள் நிம்மதி

தக்காளி விலை உயர்வு விவசாயிகள் நிம்மதி

தக்காளி விலை உயர்வு விவசாயிகள் நிம்மதி

தக்காளி விலை உயர்வு விவசாயிகள் நிம்மதி

ADDED : செப் 24, 2025 11:33 PM


Google News
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், தக்காளி (15 கிலோ பெட்டி) --- 270 ரூபாய், தேங்காய் (ஒன்று) - 30 முதல் 35 ரூபாய், கத்தரிக்காய் (கிலோ)- - 30, முருங்கைக்காய் --- 80, வெண்டைக்காய் --- 40, முள்ளங்கி --- 25, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 15, பாகற்காய் --- 25, புடலை --- 25, சுரைக்காய் --- 20, பீர்க்கங்காய் --- 40, பீட்ரூட் --- 10, வெள்ளரிக்காய் --- 20, அவரைக்காய் --- 30, பச்சை மிளகாய் -- -40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்க்கெட்டில், கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது தக்காளி (15 கிலோ பெட்டி) --- 70, வெண்டைக்காய், முள்ளங்கி, வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் ஆகியவை கிலோ - 5 ரூபாயும், பச்சை மிளகாய் --- 20 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

இதே போன்று தேங்காய் (ஒன்று) --- 2, முருங்கைக்காய் மற்றும் பாகற்காய் --- 10, புடலை, சுரைக்காய், பீட்ரூட், அவரைக்காய் -- 5 ரூபாய் விலை குறைந்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'கிணத்துக்கடவு மார்க்கெட்டில் மற்ற காய்களைத் தவிர, தக்காளி வரத்து அதிக அளவு இருக்கும். கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் பலர் நிம்மதி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us