Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தென்னை வேரில் டானிக் கட்டுதல் :வேளாண் மாணவர்கள் விளக்கம்

தென்னை வேரில் டானிக் கட்டுதல் :வேளாண் மாணவர்கள் விளக்கம்

தென்னை வேரில் டானிக் கட்டுதல் :வேளாண் மாணவர்கள் விளக்கம்

தென்னை வேரில் டானிக் கட்டுதல் :வேளாண் மாணவர்கள் விளக்கம்

ADDED : பிப் 12, 2024 12:33 AM


Google News
பொள்ளாச்சி:சிறுகளந்தையில், தென்னை டானிக் குறித்து,அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே அரசம்பாளையம், அமிர்தா வேளாண்மை கல்லுாரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர், ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், தென்னை வேரில், டானிக் கட்டுவது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி சிறுகளந்தையில் நடந்தது.

அதில், விவசாயம் செய்வதற்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், தென்னைக்கு உரம் போட்டு பராமரிப்பது சவாலாக உள்ளது.

இதற்கு ஒரு சிறந்த தீர்வுதான் வேரில், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் தென்னை டானிக் கட்டுவதாகும். இதை ஆண்டுக்கு இருமுறை, ஆறு மாத இடைவெளியில் செய்தால்,குரும்பை உதிர்வதை கட்டுப்படுத்தி அதிக காய்களைப்பெறலாம். இதனால், 20 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்கலாம் என மாணவியர், விவசாயிகளிடம் விளக்கினர்.

மேலும்,வேளாண் கல்லுாரி மாணவர்கள், வேரில்தென்னை டானிக் கட்டுவது எப்படி என்பது பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கினர்.

அமிர்தா வேளாண்மை கல்லுாரியின் முதல்வர் முனைவர் சுதீஷ், மணலில் மற்றும் குழு வழிகாட்டுனர்கள் முனைவர்கள் சிவ சபரி,நவீன் குமார்,யசோதா, கார்த்திக் ராஜா ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us