Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதையில் தகராறு இருவர் கைது

போதையில் தகராறு இருவர் கைது

போதையில் தகராறு இருவர் கைது

போதையில் தகராறு இருவர் கைது

ADDED : அக் 23, 2025 11:08 PM


Google News
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள, அரசு டாஸ்மாக் கடை முன் நின்றிருந்த நபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுப்புதூரை சேர்ந்தவர் பிரகாஷ், 44, கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்தியுள்ளார்.

அப்போது, கிணத்துக்கடவை சேர்ந்த தமிழ்ச்செல்வன், 31, மற்றும் கார்த்தி, 28, ஆகிய இருவரும் மது போதையில், பிரகாஷிடம் தகராறு செய்து, கல்லால் தலையில் அடித்தனர். அங்கிருந்தவர்கள் பிரகாைஷ மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்ச்செல்வன், கார்த்தி, இருவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us