Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கொலை வழக்கில் இருவர் கைது

கொலை வழக்கில் இருவர் கைது

கொலை வழக்கில் இருவர் கைது

கொலை வழக்கில் இருவர் கைது

ADDED : பிப் 29, 2024 11:22 PM


Google News
சூலுார்:சூலுார் அடுத்த கலங்கல் காவேரி நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், கேட்டரிங் நிறுவனம் உள்ளது.

அங்கு, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி, பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். இரு நாட்களுக்கு முன் நள்ளிரவு, மது போதையால், சமையல்காரர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

அதில், தொழிலாளி ராஜன் படுகாயமடைந்து, மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராஜனை தாக்கியதாக, கேரள மாநிலம் ஆழப்புலா பகுதியை சேர்ந்த லிஜோ 39, பாலக்காட்டை சேர்ந்த ரமேஷ், 37 ஆகிய சக தொழிலாளிகளை, அந்நிறுவன ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

சூலுார் போலீசார் கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us