ADDED : செப் 23, 2025 11:10 PM

கோவை; சி.ஐ.எஸ்.சி.இ., எனும் இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், தேசிய அளவிலான கராத்தே போட்டி, பெங்களூருவில் நடந்தது.
இதில், வெள்ளலுாரில் உள்ள நிர்மல மாதா கான்வென்ட் பள்ளி மாணவர்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி, மூன்றாம் ஆண்டாக பெருமை சேர்த்துள்ளனர். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் (30 முதல் 34 கிலோ வரை), மாணவி காவேரி வெற்றி பெற்று, இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழும (எஸ்.ஜி.எப்.ஐ.,) போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.