Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செயின் பறிப்பு போலீசார் விசாரணை

செயின் பறிப்பு போலீசார் விசாரணை

செயின் பறிப்பு போலீசார் விசாரணை

செயின் பறிப்பு போலீசார் விசாரணை

ADDED : ஜூலை 13, 2024 12:53 AM


Google News
வேப்பூர: வேப்பூர் அருகே பெண்ணிடம் 5 சவரன் தாலிச் செயினை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேப்பூர் அடுத்த நல்லுாரைச் சேர்ந்தவர் வேலு மனைவி லட்சுமி, 65; இவர் நல்லுார் வார சந்தை எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் 12:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் கடையில் பொருள் வாங்குவது போல் பேச்சு கொடுத்து கொண்டு, லட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்து சென்றார்.

புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us