கடலுாரில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்
கடலுாரில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்
கடலுாரில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 18, 2024 08:34 AM

கடலுார், : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், சி.ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார். உதவி பொதுச்செயலாளர் திருச்செல்வன், மாவட்ட செயலாளர் பழனிவேல், மாநிலக்குழு ஜீவானந்தம் சிறப்புரையாற்றினர்.
இதில், 72 லட்சம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் அழிந்துபோன நலவாரிய கணினி தரவுகளை மீட்டெடுக்க வேண்டும். நலவாரிய பண பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நிர்வாகிகள் சீனுவாசன், கிருஷ்ணமூர்த்தி, ஆளவந்தார், பாஸ்கரன், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.