Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

ADDED : ஜூலை 13, 2024 12:44 AM


Google News
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே, பூச்சிமருந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்

குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம், இடங்கொண்டான்பட்டு, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், அஞ்சாபுலி, 76; இவருக்கு மூட்டு வலி இருந்து வந்தது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருப்பினும் வலி இருந்ததால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம், பூச்சிமருந்தை குடித்தார்

உடன், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us