Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ம.தி.மு.க., ஆண்டு விழா மாவட்ட செயலாளர் அழைப்பு

ம.தி.மு.க., ஆண்டு விழா மாவட்ட செயலாளர் அழைப்பு

ம.தி.மு.க., ஆண்டு விழா மாவட்ட செயலாளர் அழைப்பு

ம.தி.மு.க., ஆண்டு விழா மாவட்ட செயலாளர் அழைப்பு

ADDED : ஜூலை 14, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
கடலுார், : வடலுார் கருங்குழியில் இன்று நடக்கும் ம.தி.மு.க., 31வது ஆண்டு துவக்க விழாவில், நிர்வாகிகள் திரளாக பங்கேற்க கிழக்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கை:

குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய ம.தி.மு.க., சார்பில் 31வது ஆண்டு கட்சி துவக்க விழா, லோக்சபா தேர்தல் வெற்றி விழா, மரக்கன்று வழங்கும் விழா, கொடியேற்று விழா இன்று (14ம் தேதி) மாலை 5:00 மணிக்கு வடலுார், கருங்குழி அண்ணா திடலில் நடக்கிறது.

ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை தாங்குகிறார். மாவட்ட பிரதிநிதி முரளி கிருஷ்ணன் வரவேற்கிறார்.

பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், அவைத் தலைவர்கள் அலெக்சாண்டர், தட்சணாமூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றனர்.

தலைமை தணிக்கை குழு உறுப்பினர் பாபு, தலைமைக் கழக பேச்சாளர் ராஜாராமன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன், எம்.எல்.எப்., தொழிற்சங்க மணிமாறன், பேச்சாளர் சங்கர் உள்ளிட்டோர் பேசுகின்றனர். கட்சியின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us