Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நன்றி தெரிவிப்பு கூட்டம் அமைச்சர் அழைப்பு

நன்றி தெரிவிப்பு கூட்டம் அமைச்சர் அழைப்பு

நன்றி தெரிவிப்பு கூட்டம் அமைச்சர் அழைப்பு

நன்றி தெரிவிப்பு கூட்டம் அமைச்சர் அழைப்பு

ADDED : ஜூன் 16, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
சிறுபாக்கம்: கடலுார் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாரும், அமைச்சருமான கணேசன் அறிக்கை:

கடலுார் லோக்சபா தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்., விஷ்ணு பிரசாத்துக்கு ஓட்டுபோட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடக்கிறது.

அதன்படி, 17ம் தேதி காலை 9:30 மணிக்கு, திட்டக்குடி ராமலிங்கம் அஞ்சுகம் திருமண மண்டபம், பகல் 11:00 மணிக்கு விருத்தாசலம் சபிதா திருமண மகால், 1:00 மணிக்கு, நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் உள்ள சின்னதுரை திருமண மண்டபத்தில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதில், இண்டியா கூட்டணி சார்பில் வெற்றிக்கு உழைத்த அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமைக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us