Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம்: பொது மக்கள் கோரிக்கை

பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம்: பொது மக்கள் கோரிக்கை

பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம்: பொது மக்கள் கோரிக்கை

பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம்: பொது மக்கள் கோரிக்கை

ADDED : ஜூலை 20, 2024 05:09 AM


Google News
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அதிகளவு குடியிருப்புகள் பல உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சியின் எல்லைகளும் நாளுக்குநாள் வேகமாக அதிகரிக்கின்றன. ஆனால் பேரூராட்சி வார்டுகளில் போதுமான வடிகால் வசதிகள் இல்லை.

இதனால் மழை காலங்களில் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி, தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை முறையாக வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை. பல வார்டுகளில் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், மழை காலங்களில் சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடும் அவலம் தொடர்கிறது.

எனவே, பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை ஏற்படுத்தவும், கழிவு நீர் சுத்திகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us